இலங்கை அரசைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை அரசைக் கண்டித்தும், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
இலங்கை அரசைக் கண்டித்தும், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளுக்கு நாள் டீசல் விலை உயர்ந்து கொண்டே போவதால் மீனவர்கள் விசைப்படகுகளை இயக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை அரசு கடல் வளத்தை அழிக்கும் நோக்கில் பழைய பேருந்துகளை கச்சத்தீவு அருகே கடலில் இறக்கியது. இதனால் கடல்வளம் பாதிப்படைந்ததோடு கடலில் மாசு ஏற்படும் அபாயம் நிலவி வருகின்றது. எனவே அத்தகைய சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கை அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கு எதிராகவும், விலை உயர்வுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.