Begin typing your search above and press return to search.
இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு அஞ்சலி
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி மற்றும் 11 ராணுவத்தினருக்கு இராமேஸ்வரம் அக்னி தீர்த்தகடலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
HIGHLIGHTS
முப்படைகளின் முதலாம் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது துணைவியார் மற்றும் 11 ராணுவ வீரர்களின் மறைவிற்கு ராமேஸ்வரத்தில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் தங்களது நெஞ்சார்ந்த கண்ணீர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் உயிரிழந்த ராணுவ தளபதியின் திருவுருவப்படம் மற்றும் ராணுவ வீரர்கள் படங்களை வைத்து மோட்சதீபத்தை ஏற்றினர். அதன் பின்னர் அக்னி தீர்த்த கடற்கரையில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது அஞ்சலி செலுத்தி கொண்டனர்.