/* */

நவீன மீன் மார்க்கெட்டை செயல்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி தர்ணா

இராமநாதபுரத்தில், நவீன மீன் மார்க்கெட்டை செயல்பாட்டுக்குக் கொண்டுவர வலியுறுத்தி, ஒப்பந்தக்காரர்,வியாபாரிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நவீன மீன் மார்க்கெட்டை செயல்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி தர்ணா
X

நவீன மீன் மார்க்கெட்டை செயல்பாட்டுக்குக் கொண்டுவரக்கோரி, இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, மீன் வியாபாரிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இராமநாதபுரத்தில் நகராட்சி நிர்வாகத்தால், புதிய பேருந்து நிலையம் அருகே, நவீன மீன் மார்க்கெட் கட்டப்பட்டு, கடந்த 14.07.2021 அன்று சார்பில் திறக்கப்பட்டது. தெருக்களிலும், அனுமதியற்ற மீன் அங்காடிகளிலும் மீன் விற்பனை செய்யக்கூடாது என்றும், புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன மீன் மார்க்கெட்டில் மட்டும்தான் மீன் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் நகராட்சி அறிவிக்கப்பட்டது.

ஆனால், தனியார் மீன் அங்காடிகளின் கட்டுப்பாடுகளால் மீன் வியாபாரிகள் அங்கு செல்ல தயங்கியதாக கூறப்படுகிறது. இதனால், மீன் மார்க்கெட் திறக்கப்பட்ட ஓரிரு வாரத்திலேயே செயலிழந்தது. இந்நிலையில் வருடத்திற்கு ரூ 46 லட்சத்திற்கு டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரரும், அங்கு மீன் விற்பனை செய்வதற்காக சென்ற சில மீன் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, புதிய நவீன மீன் அங்காடியை செயல்பாட்டுக்குக் கொண்டுவர வலியுறுத்தியும், இதனை செய்யத் தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஒப்பந்ததாரர் சசிகுமார் மற்றும் மீன் வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டோர், இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தை, இன்று முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 14 Sep 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்