/* */

பாம்பன் அருகே குடிசை வீடு தீயில் எரிந்து நாசம்

இராமேஸ்வரம், பாம்பன் அருகே குடிசை வீடு தீயில் எரிந்து சேதமடைந்தது.

HIGHLIGHTS

பாம்பன் அருகே குடிசை வீடு தீயில் எரிந்து நாசம்
X

பாம்பன் அக்காள்மடம் வடக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் அனிதா. இவர் வசித்து வரும் குடிசை வீட்டில் நேற்று எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. குடிசை வீடாக இருந்ததால் மளமளவென வீடு முழுவதும் தீ பரவியது.

இதுகுறித்து தகவலறிந்ததும் மண்டபத்தில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் வீட்டின் உள்ளே இருந்த குடும்ப அட்டை, ஆதார் அட்டை இறந்துபோன கணவரின் இறப்பு சான்றிதழ், வங்கியில் கடனாக வாங்கிய ரூ.30 ஆயிரம் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது. பாம்பன் ஊராட்சி மன்ற தலைவர் அகிலா பேட்ரிக், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் பேட்ரிக் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

Updated On: 5 April 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்