/* */

மன்னார் வளைகுடா பகுதியில் கரையோரம் மீன்பிடிக்கும் மீனவர்கள் போராட்டம்

விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நாட்டுப்படகு சிறுதொழில் மீனவக் கிராம மக்கள் காதுகளில் பூ சுற்றி போராட்டம்

HIGHLIGHTS

மன்னார் வளைகுடா பகுதியில் கரையோரம் மீன்பிடிக்கும்  மீனவர்கள் போராட்டம்
X

கரையோர மீன் பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்களை தடுத்துநிறுத்தாத மீன்வளத் துறையினரை கண்டித்து நாட்டுப்படகு மீனவர்கள் காதுகளில் பூ சுற்றி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கரையோர மீன் பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்களை தடுத்துநிறுத்தாத மீன்வளத் துறையினரை கண்டித்து நாட்டுப்படகு மீனவர்கள் காதுகளில் பூ சுற்றி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பாரதி நகர், முத்துராஜா நகர், விவேகானந்தபுரம் மற்றும் மண்டபம் முதல் ஏர்வாடி வரையிலான கடல் பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மற்றும் சிறுதொழில் மீனவர்கள் மன்னார் வளைகுடா தீவுப் பகுதிகளை நம்பியே தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் கடல் வளத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மீன்பிடித்து வருவதாகவும், ஆனால் விசைப்படகு மீனவர்கள் இழுவை வலைகளை பயன்படுத்தி இந்த பகுதியில் மீன்பிடித்து நாட்டுப்படகு மீனவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் மூலம் விசைப்படகுகள் கரையில் இருந்து 5 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் தான் மீன் பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஆனால் ஏராளமான விசைப்படகுகள் கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலேயே இழுவலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே கரையோர மீன் பிடிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசின் மீன்வளத் துறையினர் இடம் பலமுறை முறையிட்டும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத் துறையினரை கண்டித்து காதுகளில் பூ சுற்றி போராட்டம் நடத்தினர்.

Updated On: 3 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்