ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இராமேஸ்வரம் வருகை
இராமநாதபுரம்: ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இராமேஸ்வரத்தில் பூரண கும்ப மரியாதையுடன் கோலாகல வரவேற்பு.
HIGHLIGHTS
இராமேஸ்வரம் தீர்த்த யாத்திரைகாக இன்று இராமேஸ்வரத்திற்கு வருகை தந்த ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் பேருந்து நிலையம் அருகே உள்ள காட்டுப் பிள்ளையார்கோவிலில் முன்பாக கோவில் இணை ஆணையர் கோவில் ஊழியர்கள் பூரண கும்ப மரியாதை வழங்கி வரவேற்றனர். அதன்பின் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விநாயகரை வழிபாடு நடத்தினார். அதனைத் தொடர்ந்து காஞ்சி சங்கர மடம் சார்பாகவும் ஊர் பொதுமக்கள் சார்பாக லட்சுமண தீர்த்தம் பகுதியில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேள வாத்தியங்கள், கயிலாய வாத்தியங்கள் முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக காஞ்சி சங்கரமடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது வீதிகள் முழுவதும் குவிந்திருந்த பொதுமக்கள் ஸ்ரீ விஜேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெற்றனர்.