நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: புதுக்கோட்டை நகராட்சியில் 22 பேர் வேட்புமனு
புதுக்கோட்டை நகராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று வரை 22 பேர் வேட்பு மனு வழங்க உள்ளனர்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை நகராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று வரை 22 பேர் வேட்பு மனு வழங்க உள்ளனர்.
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளுக்கு வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதற்காக தமிழகம் முழுவதும் ஜனவரி 28ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் அந்தந்த பகுதிகளில் நகராட்சி பேரூராட்சி மாநகராட்சியில் வேட்பாளர்கள் வழங்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் தமிழகம் முழுவதும் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு வேட்பாளர்கள் அதிக ஆர்வத்தில் வேட்புமனுக்களை வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் போட்டியிடுவதற்காக நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளிடம் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுவை வழங்கி வருகின்றனர். இன்று மட்டும் 20 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை வழங்கியுள்ளனர்.
புதுக்கோட்டை நகராட்சியின் 42 வார்டுகளிலும் போட்டியிடுவதற்காக இதுவரை கட்சி சார்பு இல்லாத சுயேச்சை வேட்பாளர்கள் 20 பேரும் இரண்டு கட்சி சார்ந்த வேட்பாளர்கள் என மொத்தம் 22 பேர் இதுவரையில் வேட்புமனுக்கள் வழங்கியுள்ளனர்.