/* */

வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் வாக்கு கேட்கின்றனர்: அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்

நகராட்சியில் 9-வது வார்டு வேட்பாளர் செந்தாமரை பாலு, 18- ஆவது வார்டு வேட்பாளர்கவிதா சரவணன் ஆகியோருக்கு அமைச்சர் பிரசாரம்

HIGHLIGHTS

வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் வாக்கு கேட்கின்றனர்: அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்
X

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டு மற்றும் 18 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா மாவட்ட பொருளாளர் செந்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் செல்லப்பாண்டியன் ஆகியோர் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்

கடந்த தேர்தல்களில் வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் வாக்கு கேட்பார்கள்,ஆனால் கடந்த 8 மாத திமுக ஆட்சியை பார்த்துவிட்டு வாக்காளர்கள் வேட்பாளருக்கு வாக்கு கேட்கும் நிலை உருவாகிவிட்டதால் அதிமுக இந்த தேர்தலில் படுதோல்வி அடையப் போவது உறுதி என்றார்.. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

புதுக்கோட்டை நகராட்சியில் 9-வது வார்டில் போட்டியிடும் செந்தாமரை பாலு மற்றும் 18- ஆவது வார்டில் போட்டியிடும் கவிதா சரவணன் ஆகியோருக்கு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.



பின்னர் அங்குள்ள பால் விற்பனை நிலையத்திற்குச் சென்ற அமைச்சர் மெய்யநாதன் பால் வியாபாரி ஆக மாறி வாடிக்கையாளர்களுக்கு பால் ஊற்றிக் கொடுத்து விற்பனை செய்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மிகவும் வலிமையோடு போட்டியிடுகிறது.எட்டு மாத கால ஆட்சிக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.திமுக கூட்டணிக்கு தான் வாக்களிப்பது என்று மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.

கடந்த தேர்தல்களில் வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் வாக்கு கேட்பார்கள்.ஆனால் திமுக எட்டு மாத ஆட்சியை பார்த்துவிட்டு வாக்காளர்கள் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்கின்றனர்.மிகப் பெரும்பான்மையான இடங்களில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.

கடந்த கால அதிமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சி மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல நிதி ஆதாரத்தையும் சுரண்டிய ஆட்சிதான் அதிமுக ஆட்சி அந்த ஆட்சிக்கு முதல் அமைச்சராக இருந்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. ஆனால் தற்போதைய முதல்வர் மிகவும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருகிறார்.தமிழகத்தின் உரிமைகளை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவின் சமூக நீதியை காப்பாற்றும் முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.தொடர்ந்து நான்கு தேர்தலாக அதிமுக தோல்வி அடைந்து வருகிறது இந்த தேர்தலிலும் அதிமுக படுதோல்வி அடையும் என்றார்.அமைச்சர் மெய்யநாதன்.

Updated On: 8 Feb 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  7. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  9. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  10. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...