/* */

விராலிமலை தொகுதியில் முதல் சுற்றோடு வாக்கு எண்ணும் பணி நின்றது. 5 மணி நேரம் தாமதம்

விராலிமலை தொகுதியில் முதல் சுற்றோடு வாக்கு எண்ணும் பணி நின்றது. 5 மணி நேரம் தாமதத்திற்கு பின் தற்போது தொடங்கியுள்ளது

HIGHLIGHTS

விராலிமலை தொகுதியில் முதல் சுற்றோடு வாக்கு எண்ணும் பணி நின்றது. 5 மணி நேரம் தாமதம்
X

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் போட்டியிட்டார். திமுக சார்பில் பழனியப்பன் போட்டியிட்டார். இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8.30 மணிக்குத் தொடங்கியது.

முதல் சுற்றில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எழுதப்பட்டிருந்த எண்ணும் ஆவணங்களில் இருந்த எண்ணும் வேறுபட்டது. இதனால் சர்ச்சை எழுந்தது. அந்தப் பெட்டி திறந்து எண்ணப்பட்டதுடன் விவிபாட் இயந்திரமும் எண்ணப்பட்டு சரி பார்க்கப்பட்டது.

அதன்பிறகு 2ஆம் சுற்றுக்கான இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டன. அதிலும் இயந்திரத்தில் இருந்த எண் மாறுபட்டது. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எழுதப்பட்ட எண்கள் மாறுபட்டே வருவதைக் கண்ட திமுக வேட்பாளர் மற்றும் முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரினர்.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த திமுக மாவட்டப் பொறுப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன், இதுதொடர்பாக மாவட்டத் தேர்தல் அலுவலர் பி. உமாமகேஸ்வரிக்கு எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார். சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

தற்போது 4 சுற்றுகள் முடிவடைந்துள்ளது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் 18,235 வாக்குகளையும், திமுக சார்பில் போட்டியிட்ட பழனியப்பன் 12,060 வாக்குகளையும் பெற்றனர். தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

Updated On: 2 May 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...