Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டையில் ரேசன் கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
கொரோனா காலத்தில் பணி செய்த பணியாளர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வீதமும், பொங்கல் பரிசு கொடுத்த அட்டைதாரர்கைளை கணக்கிட்டு 50 பைசா வீதமும் பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டும்.
தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். மருத்துவப்படி அரசு அறிவித்த ரூபாய் 300 வழங்காமல் இருக்கும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கருப்பையா, மாவட்ட துணை தலைவர் சிங்காரவடிவேலு, மாவட்ட இணைச்செயலாளர் ஆதிசங்கர், புதுக்கோட்டை வட்ட தலைவர் சுப்பிரமணியன், ரெத்தினம், ரகுவரன், கந்தசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.