/* */

துப்புரவுபணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததால் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை ஏலம் விடும் போராட்டம்

நகராட்சி ஒப்பந்த துப்புரவுபணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்து புதுக்கோட்டை நகராட்சி அலுவலம் ரூ 10 கோடிக்கு ஏலம் விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

துப்புரவுபணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததால் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை ஏலம் விடும் போராட்டம்
X

நகராட்சி ஒப்பந்த துப்புரவுபணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்து புதுக்கோட்டை நகராட்சி அலுவலம் ரூ 10 கோடிக்கு ஏலம் விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தூய்மை பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படாத கண்டித்து நகராட்சி அலுவலகத்தை ஏலம் விடும் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகராட்சியில் 450 நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் இவர்களுக்கு முறையாக மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது

இந்நிலையில் நிரந்தர பணியாளர்களுக்கு மூன்று மாத சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மூன்று மாத சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறி கடந்த 10 தினங்களுக்கு முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர் அப்போது வருவாய் கோட்டாட்சியர் உடனடியாக சம்பளம் வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

ஆனால் அந்த உறுதி என்பது மூன்று மாத சம்பளத்திற்கு இரண்டு மாத சம்பளம் மட்டுமே நேற்று முன்தினம் இந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது ஆனால் நிரந்தர பணியாளர்களுக்கு 3 மாத சம்பளமும் இது வரை வழங்கப்படவில்லை மேலும் தூய்மைப்பணியாளர்களுக்கு தமிழக அரசு வழங்கவேண்டிய ஊக்கத்தொகை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து நகராட்சி அலுவலகத்திடம் கேட்டால் நகராட்சியில் போதிய நிதியில்லை என்று கூறுகின்றனர்.இந்த நிலையில்தான்,துப்புரவுபணியாளர்களுக்கு ஊதியம்வழங்காததைக் கண்டித்து நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து நகராட்சி அலுவலகத்தை ஏலம் விட்டு அந்த பணத்தை நகராட்சிக்கு செலுத்துவது என்று முடிவு செய்து ஏலம் விடும் போராட்டத்திற்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இன்று அறிவித்தபடி நகராட்சி அலுவலகம் முன்பாக இந்தப் போராட்டமானது நடைபெற்றது. முதலில் ஒரு ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டது.அதன் பின்னர் படிப்படியாக உயர்ந்து ரூ. 10 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்தபோதும் அவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர்.புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை ஒப்பந்தம் மற்றும் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் ஏலம் விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Updated On: 13 July 2021 6:01 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  4. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  6. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  7. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...