புதுக்கோட்டை கொரோனா பரிசோதனை முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட எம்எல்ஏ
புதுக்கோட்டை நகராட்சி திருவப்பூரில் நடந்த கொரோனா பரிசோதனை முகாமில் எம்எல்ஏ முத்துராஜா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட திருவப்பூர் அருகே பொதுமக்கள் தேடி தடுப்பூசி என்ற சிறப்பு முகாம் நடைபெற்றது இந்த சிறப்பு முகாமில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்ட மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர்
இந்த முகாமில் பொதுமக்களுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மற்றும் கொரோன தடுப்பூசி முகாம் நடைபெற்றது இந்த முகாமில் அப்பகுதியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா பொதுமக்களுக்கு தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொள்ள நான் தடுப்பூசியைப் போட்டுக் கொள்கிறேன் என்று கூறி முதல் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்
பின்னர் தடுப்பூசி போட வந்த பொதுமக்களுக்கும் தான் மருத்துவர் என்ற அடிப்படையில் கொரோன தடுப்பூசியை பொதுமக்களுக்கு போட்டுவிட்டார் இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் ,நகரக் செயலாளர் நைனா முகமது, மாவட்ட பொருளாளர் செந்தில் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.