/* */

புதுக்கோட்டையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி, எம்எல்ஏ முத்துராஜா துவக்கிவைத்தார்

புதுக்கோட்டை நகராட்சியில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை எம்எல்ஏ முத்துராஜா தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி, எம்எல்ஏ முத்துராஜா  துவக்கிவைத்தார்
X

புதுக்கோட்டை நகராட்சி முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை அழிக்க வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை எம்எல்ஏ முத்துராஜா தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகராட்சி சார்பில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் வாகனத்தை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு வார்டுக்கும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் வகையில், கொரோனா விழிப்புணர்வு ஒலிபெருக்கியுடன் கூடிய 12 வாகனங்கள் மூலம் பணிகள் துவங்கியது..இந்த நிகழ்வில் நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்ரமணியம் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Updated On: 25 May 2021 1:47 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...