சம்பளம் தராததால் நகராட்சி கட்டடத்தை ஏலம் விட்ட ஜனநாயக தூய்மை பணியாளர் சங்கத்தினர்
தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத நகராட்சியை கண்டித்து புதுக்கோட்டை நகராட்சி கட்டடத்தை 10 கோடி ரூபாய்க்கு ஏலம் விட்டு நூதன முறையில் போராட்டம்
HIGHLIGHTS
புதுக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை ஜனநாயக தூய்மைப் பணியாளர் சங்கத்தினர் நடத்திவந்தனர்.
அதன்படி சென்ற வாரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் உடனடியாக 3 மாதத்திற்கும் சம்பளங்கள் வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகம் வாக்குறுதி அளித்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு மட்டும் தற்போது சம்பளம் வழங்கி உள்ளது இன்னும் ஒரு மாதத்திற்கு சம்பளம் வழங்கவில்லை எனக் கூறியும்
அதேபோல் தமிழக அரசு அறிவித்த முன்கள பணியாளருக்கான நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி. புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனநாயக தூய்மை பணியாளர் சங்கத்தினர் தங்களுடைய கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாத நகராட்சியை கண்டித்தும் புதுக்கோட்டை நகராட்சி கட்டிடத்தை 10 கோடி ரூபாய்க்கு ஏலம் விட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
.