Begin typing your search above and press return to search.
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உடம்பில் பதாதைகளை கட்டிக் கொண்டு பிரச்சாரம்
காதலர் தினத்தை எதிர்த்து, பதாகைகளை ஏந்தி ஒருவர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
HIGHLIGHTS
உலக காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் காதலர் தினத்திற்கு இந்தியாவில் ஆதரவு, எதிர்ப்பு ஆகியவை சரிசமமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கலாச்சார பண்பாடுகளை சீரழிவுக்கு வழிவகுக்கும், உலக காதலர் தினத்தை எதிர்த்து மாணவிகள், பெண்கள் ஆகியோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த 6 வருடங்களாக ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த வருடம் புதுக்கோட்டைக்கு வந்த அவர், மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையம், கல்லூரிகள் ஆகியவற்றில் ஏழு வகையான பதாகைகளை தனது உடம்பில் ஏந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார்.