தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைப்பு
தமிழகம் முழுவதும் உள்ள பிரபல 46 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்குத் தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர்
HIGHLIGHTS
புதுக்கோட்டையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமை உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து முதல்கட்டமாக 18 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா ஏற்பாட்டில், புதுக்கோட்டை நகர்மன்றத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் உள்ள பிரபல 46 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்குத் தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர்.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில், புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது, திருச்சி, தஞ்சை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தங்களுக்கு ஏற்ற பணிகளை தேர்வு செய்தனர்.இதன் பின்னர், அவர் பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட கோரிக்கை மனுக்களின் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இதில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, மாவட்ட பொருப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன், நிர்வாகிகள் க. நைனாமுகமது, எம்.எம். பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.