/* */

புதுக்கோட்டை தனியார் உரக்கடைகளில் வேளாண் அலுவலர்கள் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உரக்கடைகளில் யூரியா சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்று வேளாண் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை தனியார் உரக்கடைகளில் வேளாண் அலுவலர்கள் திடீர் ஆய்வு
X

உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு, 73 ஆயிரத்து 257 எக்டர் பரப்பளவில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவைக்காக யூரியா, வேளாண் துறையால் சப்ளை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு யூரியா தங்குதடையின்றி கிடைப்பதற்கும் , பயிர்களை காப்பாற்றுவதற்கும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது

புதுக்கோட்டை மாவட்ட தேவைக்காக, தூத்துக்குடி மாவட்டம் ஸ்பிக் நிறுவனத்திடம் இருந்து ரயில் மூலம் 22 பெட்டிகளில் 1600 மெட்ரிக் டன் யூரியா கொண்டுவரப்பட்டது. யூரியா மூட்டைகள் ரயிலில் இருந்து லாரிக்கு மாற்றப்பட்டு மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சொசைட்டிகள் மற்றும் தனியார் உர நிறுவன கடைகளுக்கு அனுப்பப்பட்டன.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அழுதாராம் உத்தரவின் பேரில், வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் முன்னிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு கடைகளில் நேற்று, அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்கள் உரக்கடைகளுக்கு நேரடியாக சென்று, விவசாயிகளுக்கு சரியான முறையில் யூரியா வழங்கப்படுகிறதா என்பதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். அரசு விதிமுறைகளின்படி கூட்டுறவு சொசைட்டிகள் தனியார் உரக்கடைகள் விதிமுறைகளை பின்பற்றி கடைகளில் யூரியா இருப்பு விபரத்தினை சரியான முறையில் பதிவேடுகளில் எழுதி பராமரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தனர்.

Updated On: 15 Nov 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!