கொரோன வார்டுக்கே சென்று நோயாளிகளை சந்தித்த எம்எல்ஏ
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, கொரோனா வார்டுக்கே சென்று நோயாளிகளை சந்தித்தார்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா இன்று மீன் மார்க்கெட் பகுதி பொன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு பணியை மேற்கொண்டார். அப்பொழுது பழைய அரசு மருத்துவமனையில் கொரோன் வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை வார்டு உள்ளே பாதுகாப்பு உடை அணிந்து நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்து ஆய்வு செய்தார்.
அதேபோல் தடை செய்யப்பட்ட பகுதியாக பொன்நகர் பகுதியில் நேரடியாக உள்ளே சென்று அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறதா என்பது குறித்தும், அப்பகுதியில் பொது மக்களிடம் நேரடியாகச் சென்று அவர்களிடம் விசாரணை செய்தார் .
அப்போது அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்இ முககவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த ஊரடங்கு கை முறையாக கடைபிடிக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் இந்த ஆய்வில் கோட்டாட்சியர் டைசி குமார், நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன், தாசில்தார் முருகப்பன், மற்றும் திமுக நகர கழக செயலாளர் நைனா முகமது, மாவட்ட பொருளாளர் செந்தில் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்