/* */

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட கருத்தரங்கம்

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் வங்கியாளர்கள், துறை அலுவலர்களுக்கான இணை மானியத்திட்டம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட கருத்தரங்கம்
X

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இணைமானிய திட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கையேட்டினை வெளியிட்ட ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் வங்கியாளர்கள் மற்றும் பிறதுறை அலுவலர்களுக்கான இணை மானியத் திட்டம் குறித்த கருதரங்கம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் வங்கியாளர்கள் மற்றும் பிறதுறை அலுவலர்களுக்கான இணை மானியத் திட்டம் குறித்த கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இணைமானிய திட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கையேட்டினை வெளியிட்டு தெரிவித்ததாவது; தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்தல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் என்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருவரங்குளம், அறந்தாங்கி மற்றும் விராலிமலை வட்டாரங்களைச் சார்ந்த 172 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் தனி நபர் மற்றும் குழு தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 30 சதவிகிதம் (அதிகபட்சமாக 40 இலட்சம் வரை) மானியமாக வழங்குவதற்காக இணை மானிய திட்டம் என்ற செயல்பாடு செயல்படுத்தப்பட உள்ளது. அதனடிப்படையில் இன்றைய தினம் இணை மானிய திட்டம் குறித்து வங்கியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுக்கான திட்ட விளக்க கருத்தரங்கம்; நடைபெற்றது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் தொழில் புரிய ஆர்வமுள்ள தனி நபர் மற்றும் குழு நபர்களை கண்டறிந்து ஆரம்ப நிலை சரிபார்ப்புகளை நிறைவு செய்து வங்கிக்கு தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு உடனடியாக பரிசீலனை செய்து கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட செயல் அலுவலர் ஜெய்கணேஷ், ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட இயக்குநர் ரேவதி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் சம்பத், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், செயல் அலுவலர்கள் கிருபாகரன், வேத இளையராஜா, ஜெகதீசன், ராஜேந்திரன், திராவிடச்செல்வி, தொழில் நிதி வல்லுநர் ரவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Aug 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  2. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  3. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  4. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  5. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  8. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  9. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  10. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?