/* */

ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!

அன்பும், பண்பும், பாரம்பரியமும் நிறைந்த ஒரு மூத்த சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.

HIGHLIGHTS

ஒரு வரலாற்று கலாசாரம்  முடிவுக்கு வருகிறது..!
X

பாரம்பர்ய பண்பாடுகளை பேரப்பிள்ளைகளுக்கு  ஊட்டிய பாட்டிகள் (கோப்பு படம்)

வரும் 10 முதல் 15 ஆண்டுகளில் அன்பாலும் பாசப் பிணைப்பாலும் கட்டமைக்கப்பட்ட மற்றும் தர்மத்திற்குக் கட்டுப்பட்ட ஒரு மூத்த தலைமுறை உலகை விட்டுப் போக இருக்கிறது.

முந்தைய தலைமுறை மக்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்.! இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள். அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள், காலையில் நடை பயிற்சிக்குச் செல்பவர்கள். வீடு, தோட்டம் செடிகளுக்கும் தண்ணீர் விடுபவர்கள், கருவேப்பிலை, பச்சை மிளகாய், மருதாணி, செம்பருத்தி தன் வீட்டிலேயே வளர்ப்பவர்கள். கடவுளை வழிபடுவதற்காக தானே பூக்களைப் பறித்து பிரார்த்தனை செய்பவர்கள்.

தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள். வழியில் சந்திப்பவர்களுடன் பேசுபவர்கள். அவர்களின் மகிழ்ச்சியையும், துயரத்தையும் விசாரிப்பவர்கள். இரு கைகளை கூப்பி வணக்கம் தெரிவிப்பவர்கள்.

வழிபாடு இல்லாமல் உணவை எடுத்துக் கொள்ளாதவர்கள். அவர்கள் உலகம் வித்தியாசமான உலகம், அவர்களும் வித்தியாசமானவர்கள். திருவிழாக்கள், விருந்தினர் உபசாரம், உணவு, தானியங்கள், காய்கறிகள், அக்கறை, யாத்திரை, பழக்க வழக்கங்கள் அவர்களின் அனைத்துமே யதார்த்தமாகவும், மனித நேயத்தோடும், இயற்கையாகவும், எந்தவிதமான நாடகத்தன்மையும் கலவாமல் இருக்கும்.

லேண்ட் லைன் தொலைபேசி மீது அலாதிப் பிரியம் கொண்டவர்கள். தொலைபேசி எண்களை மனப்பாடமாகவும், டைரியிலும் பராமரிக்கும் பழக்கம் உடையவர்கள். முகவரியைத் தெளிவாக கூறுவார்கள். முடிந்தால் அழைத்துச் சென்று காட்டுவார்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை செய்தித்தாளைப் படிப்பவர்கள். எப்போதும் ஏகாதசி, அமாவாசை மற்றும் பௌர்ணமி நினைவில் வைத்து கொள்பவர்கள் இந்த மக்கள், கடவுள் மீது வலுவான நம்பிக்கை உள்ளவர்கள், குடும்ப, சமூக அக்கறை பயம் உள்ளவர்கள்.

தைத்துப் பராமரிக்கப்பட்ட பழைய செருப்புடன் உலா வருபவர்கள், பனியன், பெரிய கண்ணாடி என மிக எளிய தோற்றத்தில் உலா வருபவர்கள். கோடையில் ஊறுகாய், வடாம் தயாரிப்பவர்கள், வீட்டில் உள்ள உரலில் இடித்த மசாலாப் பொருள்களை பயன்படுத்துபவர்கள்.

விடியற் காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு அவர்களே தங்கள் கைகளாலேயே வீட்டைப்பெருக்கி, ஒட்டடை அடித்து வீட்டை சுத்தபத்தமாக வைத்திருப்பவர்கள்.

எப்போதும் நாட்டு மாட்டுப்பால், தக்காளி, கத்திரிக்காய், வெந்தயம், கீரைகளைத் தேடித் தேடி வாங்குபவர்கள். இவர்கள் அனைவரும் நம்மை மெதுவாக விட்டுச் செல்ல இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியுமா..? உங்கள் வீட்டிலும் இப்படி யாராவது இருக்கிறார்களா..?

ஆம் எனில், நீங்கள் மட்டுமே மிகவும் கொடுத்து வைத்தவர்கள். அவர்களை மிகவும் அன்பாக கவனித்துக் கொள்ளுங்கள். மரியாதை கொடுங்கள். அவர்களிடம் இருந்து வாழ்வியலைக் கற்று கொள்ளுங்கள். இல்லையெனில் அவர்களுடன் ஒரு முக்கியமான வாழ்வியல் என்னும் அதி முக்கிய வாழ்க்கைப் பாடம் அழிந்தே போய்விடும். அதாவது,மனநிறைவு, எளிமையான வாழ்க்கை, உத்வேகம் தரும் வாழ்க்கை, கலப்படம் மற்றும் புனைவு இல்லாத வாழ்க்கை, நமது கலாசாரத்தின் வழியைப் பின்பற்றும் வாழ்க்கை மற்றும் அக்கறையுள்ள ஒரு ஆத்மார்த்தமான வாழ்க்கை எல்லாம் அவர்களுடன் மறைந்து விடும்.

உங்கள் குடும்பத்தில் யார் மூத்தவராக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை, நேரம் மற்றும் அன்பு கொடுங்கள். நம் முன்னோர்களே நமது அடையாளம், நமது முகவரி, மற்றும் நமது பெருமை. தனி மனித வாழ்வில் சடங்குகள் மட்டுமே பல குற்றங்களைத் தடுக்க முடியுமே தவிர, அரசாங்கத்தால் மட்டுமே முழுமையாகத் தடுத்து விட இயலாது.

இயற்கையோடு ஒன்றி வாழ முயற்சிப்போம். ஆரோக்கியம் பேணுவோம். உடல் நலனிற்கு முக்கியத்துவம் தருவோம். பாரம்பரியத்தை தூக்கிச்செல்லும் கலாச்சாரக் காவலராவோம். பெரியவர்களை மதிப்போம்.

தாத்தாவும், பாட்டியும் கதை சொல்லி வளர்ந்த சமூகம் அறிவு, பண்பு, ஒழுக்கம் என பண்பாடு நிறைந்தவர்களாக இருந்தனர். அது தாத்தா பாட்டி கற்றுக்கொடுத்த வாழ்வியல் நெறி.

Updated On: 7 May 2024 5:41 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  3. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  6. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  9. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  10. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!