/* */

இந்தியாவின் இருள் அகற்றுவோம் பிரசார இயக்கம்: சிபிஎம் எம்எல்ஏ பங்கேற்பு

இந்தியவின் இருள் அகற்றுவோம். மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்கிற முழக்கத்தை முன்வைத்து சிபிஎம் கட்சியினர் பிரசாரம்

HIGHLIGHTS

இந்தியாவின் இருள் அகற்றுவோம் பிரசார இயக்கம்: சிபிஎம் எம்எல்ஏ பங்கேற்பு
X

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு பிரசாரம் நடைபெற்று வருகிறது

இந்தியாவின் இருள் அகற்றுவோம் சிபிஎம் பிரசார இயக்கத்தில் எம்.சின்னதுரை எம்எல்ஏ பங்கேற்று பேசினார்.

இந்தியவின் இருள் அகற்றுவோம். மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்கிற முழக்கத்தை முன்வைத்து புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு பிரசாரம் நடைபெற்று வருகிறது.

தேச ஒற்றுமை, சுதந்திரம், ஜனநாயகம், மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்க வலியுறுத்தி கந்தர்வகோட்டையில் நடைபெற்ற பிரசாரத்திற்கு கட்சியின் கறம்பக்குடி தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.ராமையன், ஒன்றியக்குழு உறுப்பினர் கே.சித்திரரைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கீரனூரில் நடைபெற்ற பிரசாரத்திற்கு; கீரனூர் நகரச் செயலாளர் என்.ஆறுமுகம் தலைமை வகித்தார். குன்றாண்டார்கோவில் ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கவேல், விதொச மாவட்டத்தலைவர் எம்.சண்முகம், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் பெருமாள், கீரமங்கலம் பேரூராட்சி எம்.மகாலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 1 Sep 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  6. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  7. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  8. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  9. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது