இந்தியாவின் இருள் அகற்றுவோம் பிரசார இயக்கம்: சிபிஎம் எம்எல்ஏ பங்கேற்பு
இந்தியவின் இருள் அகற்றுவோம். மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்கிற முழக்கத்தை முன்வைத்து சிபிஎம் கட்சியினர் பிரசாரம்
HIGHLIGHTS
இந்தியாவின் இருள் அகற்றுவோம் சிபிஎம் பிரசார இயக்கத்தில் எம்.சின்னதுரை எம்எல்ஏ பங்கேற்று பேசினார்.
இந்தியவின் இருள் அகற்றுவோம். மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்கிற முழக்கத்தை முன்வைத்து புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு பிரசாரம் நடைபெற்று வருகிறது.
தேச ஒற்றுமை, சுதந்திரம், ஜனநாயகம், மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்க வலியுறுத்தி கந்தர்வகோட்டையில் நடைபெற்ற பிரசாரத்திற்கு கட்சியின் கறம்பக்குடி தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.ராமையன், ஒன்றியக்குழு உறுப்பினர் கே.சித்திரரைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கீரனூரில் நடைபெற்ற பிரசாரத்திற்கு; கீரனூர் நகரச் செயலாளர் என்.ஆறுமுகம் தலைமை வகித்தார். குன்றாண்டார்கோவில் ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கவேல், விதொச மாவட்டத்தலைவர் எம்.சண்முகம், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் பெருமாள், கீரமங்கலம் பேரூராட்சி எம்.மகாலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.