/* */

மதுபான கடைகளில் வரிசை கட்டி நின்ற மது பிரியர்கள்

ஊரடங்கில் கடை இருக்காது என்பதால், மதுப் பிரியர்கள் அட்டை பெட்டிகளிலும், வாகனங்களிலும் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

HIGHLIGHTS

மதுபான கடைகளில்  வரிசை கட்டி நின்ற மது பிரியர்கள்
X

தமிழகம் முழுவதும் கொரோன வைரஸ் தொற்று இரண்டாவது அலையாக வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நேற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் திங்கள் முதல் பதினைந்து நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார். பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக ஏற்கனவே அறிவித்த ஊர் அடங்கிய தளர்த்தி அனைத்து கடைகளும் மற்றும் சலூன் கடைகள், மதுக்கடைகள். பேருந்து உள்ளிட்ட அனைத்தும் சனி மற்றும் ஞாயிறு காலை முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என அறிவித்தார்.

முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு மதுபான கடையில் இன்றும் நாளையும் காலை முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என அறிவித்ததால், புதுக்கோட்டையில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் மது பிரியர்கள் கட்டைபையுடன் மதுபான கடைகளில் வரிசைகட்டி நின்றனர்.

மதுப் பிரியர்கள் அட்டை பெட்டிகளிலும், வாகனங்களிலும் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இதனால் அரசு மதுபான கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முகக் கவசம் அணியாமலும் கூட்டம் கூட்டமாக அரசு மதுபானக் கடைகளில் மது பிரியர்கள் மதுவை வாங்கி சென்றதால் நோய் தொற்று பரவும் சூழ்நிலை உள்ளாகியது.

Updated On: 8 May 2021 8:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!