மதுபான கடைகளில் வரிசை கட்டி நின்ற மது பிரியர்கள்
ஊரடங்கில் கடை இருக்காது என்பதால், மதுப் பிரியர்கள் அட்டை பெட்டிகளிலும், வாகனங்களிலும் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் கொரோன வைரஸ் தொற்று இரண்டாவது அலையாக வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நேற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் திங்கள் முதல் பதினைந்து நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார். பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக ஏற்கனவே அறிவித்த ஊர் அடங்கிய தளர்த்தி அனைத்து கடைகளும் மற்றும் சலூன் கடைகள், மதுக்கடைகள். பேருந்து உள்ளிட்ட அனைத்தும் சனி மற்றும் ஞாயிறு காலை முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என அறிவித்தார்.
முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு மதுபான கடையில் இன்றும் நாளையும் காலை முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என அறிவித்ததால், புதுக்கோட்டையில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் மது பிரியர்கள் கட்டைபையுடன் மதுபான கடைகளில் வரிசைகட்டி நின்றனர்.
மதுப் பிரியர்கள் அட்டை பெட்டிகளிலும், வாகனங்களிலும் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இதனால் அரசு மதுபான கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முகக் கவசம் அணியாமலும் கூட்டம் கூட்டமாக அரசு மதுபானக் கடைகளில் மது பிரியர்கள் மதுவை வாங்கி சென்றதால் நோய் தொற்று பரவும் சூழ்நிலை உள்ளாகியது.