/* */

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 4 மணி நேரமாக பலத்த மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்  4 மணி நேரமாக பலத்த மழை
X

புதுக்கோட்டையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளில் சாலையில் முகப்பு விளக்கை எரியவிட்டு ஊர்ந்து வரும் வாகனம்

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், மதுரை, வேலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் , சிவகங்கை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மாலை 4 மணி முதல் தொடர்ந்து தற்போது வரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது . குறிப்பாக, புதுக்கோட்டை நகர பகுதிகளில் நீதிமன்ற வளாகம், மின்வாரிய அலுவலகம், பழைய பேருந்து நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். தொடர்ந்து 4 மணி நேரமாக பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Updated On: 1 Sep 2021 3:08 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?