வீடு வீடாக சென்று ஊராட்சி தலைவர் கொரோன தடுப்பூசி விழிப்புணர்வு!
கொரோன தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர் வீடு வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
HIGHLIGHTS
கொரோன வைரஸ் தொற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சிமன்றத் தலைவர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைவரும் அந்தந்த பகுதியில் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து புதுக்கோட்டை 9ஏ நத்தம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் பாபு இன்று அவருடைய ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கொரோனா தடுப்பூசியை அனைத்து பொதுமக்களும் போட்டுக்கொள்ள வேண்டும். அரசு சொல்லும் அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்து வீடுகளில் இருக்க வேண்டும்.
முகக் கவசம் அணிய வேண்டும் என ஒவ்வொரு வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியும், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் பொடிகளை இலவசமாக வழங்கியும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் உடனிருந்தனர்