புதுக்கோட்டையில் ராக்கெட் விட்டு நூதன முறையில் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் ராக்கெட் விட்டு நூதன முறையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் சார்பில் நூதன முறையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
மேலும் மத்திய அரசை கண்டிக்கும் விதத்தில் காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட், தி.மு.க, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டை நகர குழு சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுபடுத்தக்கோரியும்,
சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தாதே என மத்திய அரசை கண்டித்து ராக்கெட் விடும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
இதில் ராக்கெட் போல் விண்ணை முட்டும் அளவிற்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டிக்கும் விதத்தில் பேப்பர் மூலம் ஆளுயர ராக்கெட்டை செய்தும் காகிதத்தால் ராக்கெட் செய்தும் பறக்கவிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் சோலையப்பன், மாவட்ட செயற்குழு சங்கர், நாகராஜன், பொன்னின், அன்பு மணவாளன், ஜனார்த்தனன், சலோமி உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.