பிளக்ஸ் போர்டால் அதிர்ந்த வேலைவாய்ப்பு அலுவலகம்
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு வேலை கிடைக்காதது குறித்து இளைஞர் ஒருவர் வைத்த பிளக்ஸ் பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்ற இளைஞர் பட்டப்படிப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிந்து வைத்து நேற்றுடன் 24 ஆம் ஆண்டாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக புதுப்பித்துக் கொண்டார். இதனை நினைவுபடுத்தும் வகையில் அவருடைய நண்பர்கள் 24 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக புதுப்பித்துக் கொண்டார் என்பது குறித்தும் அவருடைய ஐடி எண், செல்போன் எண் உள்ளிட்டவைகளை வைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு பிளக்ஸ் பேனரை அவருடைய படத்துடன் வைத்துள்ளனர். இதனால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதுமட்டுமில்லாமல் ஆறுதலுக்கு கூட நலம் விசாரித்து ஒரு கடிதம் கூட வந்ததில்லை எனவும் வேலை இல்லாத இளைஞர்கள் என அந்த அச்சிடப்பட்டு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர்கள் அந்த பேனரை அகற்றி உள்ளனர் என அந்த இளைஞர் கூறியுள்ளார். தற்போது அந்த பிளக்ஸ் பேனர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.