/* */

பெரம்பலூரில் தொடர் ஆடுகள் திருட்டு - ஆடுகளை அழைத்து வந்து போலீஸ் எஸ்.பியிடம் மனு

பெரம்பலூரில் ஆடு திருடர்களை கண்டுபிடிக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆடுகளை அழைத்து வந்து கிராம மக்கள் மனு அளித்தனர்..

HIGHLIGHTS

பெரம்பலூரில் தொடர் ஆடுகள் திருட்டு - ஆடுகளை அழைத்து வந்து   போலீஸ் எஸ்.பியிடம்  மனு
X

.சமீப காலமாகவே பெரம்பலூரில் உள்ள கொளக்காநத்தம், குடிக்காடு, கொட்டரை, தெற்குமாதவி என 8ற்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுவரை 40க்கும் அதிகமான ஆடுகள் திருட்டு போகியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர். இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கயவர்களை கடந்த ஏப்.18 அன்று ஆடு திருட முயற்சி செய்த போது மக்கள் சிலர் விரட்டி பிடிக்கச் சென்றனர்.

அப்போது ஆடு திருடர்கள் ஆடுகளை கீழே இறக்கிவிட்டு சென்றனர். அப்போது கிராம மக்கள் செல்போனில் படம் பிடித்தனர். இது குறித்து உரிய ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் தொடர்ந்து அலட்சியம் செய்து வருகின்றனர்.

ஆடு திருடர்களை மருவத்தூர் போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனைத் தொடர்ந்து தொடர்ந்து பாதிக்கப்படும் ஆடு வளர்ப்போர் இன்று ஆடுகளுடன் பெரம்பலூர் சென்றனர். அங்கு மாவட்ட காவல் கண்பாளரிடம் மனு அளித்து, எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் என கோரிக்கை வைத்தனர்.

Updated On: 23 April 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்