Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு காய்கறி வழங்கிய ஊராட்சி தலைவர்
பெரம்பலூர் அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு காய்கறிகளை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாபெரும் தடுப்பூசி போடும் முகாம்கள் கடந்த பன்னிரண்டாம் தேதி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்களில் ஒரே நாளில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் பெரம்பலூர் அருகே கவுள் பாளையம் கிராமத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கவுள் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் காய்கறிகள் அடங்கிய பைகளை இலவசமாக வழங்கினார்.