பெரம்பலூர்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு எம்.எல்.ஏ.நிவாரண உதவி
பெரம்பலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு எம்.எல்.ஏ. பிரபாகரன் நிவாரண உதவிகளை வழங்கினார்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக பச்சைமலை கிராமத்தில் கொட்டி தீர்த்த கன மழையால் மேலப்புலியூர் மலை அடிவாரத்தில் இருந்து வெள்ளமாக பெருக்கெடுத்து மேலப்புலியூர் ஏரி ஒரே இரவில் நிரம்பி வழிய தொடங்கியது.
இந்த வெள்ள நீர் ஓடையில் இருந்து அடைப்புகள் ஆக்கிரமிப்புகள் காரணமாகவே கிராமத்திற்கு தெருக்கள் முழுவதும் தண்ணீர் புகுந்ததால் அங்கிருந்த கிராமமக்கள் சிக்கி முக்கி தள்ளாடினர். மழை வெள்ளத்தால் பல்வேறு வீடுகள் இடிந்து சேதம் ஏற்பட்டது . தகவலறிந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்து முதல் கட்டமாக பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவியை வழங்கினார்.
பச்சை மலையில் இருந்து வெள்ளை நீர் பெருக்கெடுத்து செல்லும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஓடைகளை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் ,அதேபோல் மழைநீரால் பாதிக்கப்பட்ட 63 வீடுகள், நூலகம் மற்றும் தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கவும், முகாம் அமைத்து மருத்துவ பரிசோதனைகளை சிகிச்சைகளை மேற்கொள்ளவும் சுகாதார துறை அதிகாரிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் அறிவுறுத்தினார்.