/* */

பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை

மருதையாற்று வெள்ளத்தினால் பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு  தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை
X

மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் தற்போது வரை விட்டு விட்டுமழைபெய்து வருகிறது.இதனிடையே மருதையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்ததால் மருதையாற்றில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது.ஏற்கனவே பெய்த மழையில் கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம் நிரம்பிவிட்டதால் தற்போதுசெல்லும் நீர் உபரிநீர் போக்கிவழியாக அப்படியே வெளியேறிவருகிறது.

சுமார் 4500 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் இருகரையோர மக்கள் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் ஆற்றை கடக்கவோ,அருகில் செல்லவோ வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து கரையோர பகுதியில் உள்ள கிராமங்களில் தண்டோராமூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.இதனிடையே மருதையாறு நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Updated On: 26 Nov 2021 5:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்