Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்
பெரம்பலூரில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை பெரம்பலூர் எம்எல்ஏ., இரா.தமிழ்ச்செல்வன் மற்றும் குன்னம் எம்எல்ஏ., இராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர்.மேலும் இன்று அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தையும் குழந்தையின் பெற்றோர்களிடம் வழங்கினார்கள்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் கீதாராணி செய்திருந்தார்.