/* */

பசுமை நாமக்கல் திட்டத்தின்கீழ் மரம் நடும் இயக்கம்: கலெக்டர் ஸ்ரேயாசிங் பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் பசுமை நாமக்கல் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

பசுமை நாமக்கல் திட்டத்தின்கீழ் மரம் நடும் இயக்கம்: கலெக்டர் ஸ்ரேயாசிங் பங்கேற்பு
X

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற, பசுமை நாமக்கல் திட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

நாமக்கல் மாவட்டத்தில், பசுமை நாமக்கல் திட்டத்தின் கீழ், வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் மற்றும் பேங்குகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மூலமாக அரசுக்கு சொந்தமான இடங்கள், அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி வளாகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள், ஊராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் அதிக அளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட ஊராட்சி அலுவலகம் முதல், கலெக்டரின் முகாம் அலுவலகம் வரை 150 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் கொய்யா, சீத்தா, நொச்சி, செம்பருத்தி, நந்தியாவட்டம் உள்ளிட்ட மரக்கன்று வகைகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் டிஆர்டிஏ திட்ட இயக்குநர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, நாமக்கல் ஆர்டிஓ மஞ்சுளா, பிஆர்ஓ சீனிவாசன் ரெட்கிராஸ் செயலார் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Jun 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...