Begin typing your search above and press return to search.
நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா
நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைவர் சரவணன் விழாவுக்கு தலைமை வகித்தார். உலகத்தில் தர்மம் அழியும் போது அவற்றை காக்கவே மகாவிஷ்ணு கிருஷ்ண அவதராரம் எடுத்த நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது என்பதை விளக்கும் வகையில் அவர் எடுத்த அவதாரங்களை மாணவர்கள் நாடகமாக நடித்துக் காட்டினர்.
இதனைத்தொடர்ந்து குழந்தைகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. கண்ணனின் இளம் பருவத்தை நினைவுபடுத்தும் வகையில் வெண்ணெய் நிறைந்த பானையை உடைக்கும் போட்டி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் விழாவில் கலந்துகொண்டனர்.