நாமக்கல்லில் உரிய ஆவணமின்றி இயக்கிய 56 வாகனங்கள் பறிமுதல்
நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து துறையினரின் வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி இயக்கப்பட்ட 56 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
HIGHLIGHTS
சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவின் படியும், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தல் பேரிலும், மாவட்டம் முழுவதும், கடந்த மாதம் திடீர் வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆர்டிஓ.,க்கள் முருகன், முருகேசன் ஆகியோர் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், உமாமகேஸ்வரி மற்றும் ராசிபுரம், ப.வேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர்களால் வாகன சோதனை நடத்தப்பட்டது.
ஆய்வில், 4,323 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவற்றில் 842 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் வரி செலுத்தாமல் ஓட்டிய, வாகனங்களுக்கு ரூ. 17,68,597 ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டது.
அதேபோல் 489 வாகனங்களுக்கு ரூ. 20,61, 250 அபராதம் விதிக்கப்பட்டது. இச்சோதனையின் போது வாகனத்தின் எப்.சி சான்று இல்லாதது, பர்மிட் இல்லாதுது, சாலை வரி செலுத்தாமல் இயக்கியது உள்ளிட்ட 56 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.