நாமக்கல் ரோட்டரி சங்கங்கள் சார்பில் நகராட்சி பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணம்
நாமக்கல் ரோட்டரி சங்கங்கள் சார்பில் நகராட்சி முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டதன.
HIGHLIGHTS
நாமக்கல் நகரில் உள்ள டிரான்ஸ்போர்ட் ரோட்டரி சங்கம், எவர்கிரீன் ரோட்டரி சங்கம், இன்ஃபினிட்டி ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் சார்பில், நகராட்சியில் பணிபுரியும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ,நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
ரோட்டரி மாவட்ட கவர்னர் (தேர்வு) சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் முன்னிலை வகித்தார். நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் 490 பேருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டன.
ரோட்டரி மாவட்ட துணை கவர்னர்கள் செல்வகுமார், ஞானசேகர், தலைவர்கள் ரமேஷ், யுவராஜ், சந்தோஷ்கண்ணன், செயலாளர்கள் ராஜ்குமார், இளஞ்சேரன், பாலு, பொருளாளர்கள் செந்தில், ராமச்சந்திரன், சிவச்சந்திரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.