/* */

இ-சேவை மையம் அமைக்க விரும்புகிறீர்களா? அப்ப இது உங்களுக்குத்தான்!

இ சேவை மையம் அமைக்க விரும்புவோர்களுக்கு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

இ-சேவை மையம் அமைக்க விரும்புகிறீர்களா? அப்ப இது உங்களுக்குத்தான்!
X

நாமக்கல் மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ- சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப முடியும். இத்திட்டத்தை பற்றி கூடுதல் தகவல் பெறவும், இண்டர்நெட் மூலம் விண்ணப்பிக்கவும், டிஎன்இசேவை.டிஎன்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட் முகவரியை பயன்படுத்தலாம்.

இம்மாதம் 30ம் தேதி மாலை 4 மணி வரை மட்டுமே இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். கிராமப்புறங்களில் இசேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக்க கட்டணம் ரூ.3,000 மற்றும் நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6,000 ஆகும்.

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். அருகிலுள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை முகவரி என்ற ஆண்ட்ராய்டு மொபைல் அப்ளிகேசனை பயன்படுத்திக் காணலாம். அல்லது டிஎன்இஜிஏ.இன் என்ற வெப்சைட் முகவரியிலும் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 18 Jun 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு