/* */

சிறப்பாக மருத்துவ சிகிச்சை அளித்த மோகனூர் அரசு டாக்டருக்கு முதல் பரிசு

சிறப்பாக மருத்துவ சிகிச்சை அளித்த மோகனூர் அரசு டாக்டருக்கு முதல் பரிசினை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

HIGHLIGHTS

சிறப்பாக மருத்துவ சிகிச்சை அளித்த மோகனூர் அரசு டாக்டருக்கு முதல் பரிசு
X

சிறப்பாக பணியாற்றிய மோகனூர் அரசு டாக்டருக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசு வழங்கினார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவ அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கூட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளான, கர்ப்பிணிகளின் விபரங்களை பதிவு செய்தல், கர்ப்பிணிகளுக்கான மாதாந்திர பரிசோதனை, மகப்பேறு சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், காசநோய், தொழுநோய், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் சிகிச்சை, பயனாளிகளின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்பட்ட நபர்களின் உடல்நிலை முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து, கடந்த மாதம் மருத்துவ சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய, மோகனூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலருக்கு முதல் பரிசு, நாமகிரிப்பேட்டை மற்றும் பேளுக்குறிச்சி மருத்துவ அலுவலர்களுக்கு முறையே, இரண்டாம், மூன்றாம் பரிசுகளை, கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார். அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 24 May 2022 11:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு