/* */

இராசிபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்க கோரிக்கை

இராசிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்க வேண்டும் என்று வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

இராசிபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்க கோரிக்கை
X

தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின், மாவட்ட செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார். செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் ரகுநாதன் கோரிக்கை குறித்து விளக்கினார். கூட்டத்தில், திருச்செங்கோடு தாலுக்காவில் உள்ள மல்லசமுத்திரம், வையப்பமலை குறு வட்டங்கள் மற்றும் ராசிபுரம் தாலுக்காவில் உள்ள வெண்ணந்தூர் குறு வட்டம் ஆகியவற்றை உள்ளடக்கி, மல்லசமுத்திரத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய தாலுக்கா அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில், புதிய தாலுக்காக்கள் பிரிக்கப்பட்டு, தற்போது 8 தாலுக்கா உள்ளன. இந்த நிலையில் 2 வருவாய் கோட்டங்கள் மட்டுமே உள்ளன. எனவே, பொதுமக்களின் நன்மை கருதியும், நிர்வாக வசதிக்காகவும், ராசிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய வருவாய் கோட்டம் உருவாக்க வேண்டும் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வருவாய் நிர்வாகத்தில், கிராமத்தின் அடிப்படை பணியிடமாக உள்ள கிராம உதவியாளர் காலி பணியிடங்கள், 8 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. நிர்வாக நலன் கருதி, கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க மாவட்ட துணை தலைவர்கள் அரவிந்தன், அம்ஜத், பொருளாளர் சரவணகுமார் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Jan 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!