/* */

நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு

நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு
X

நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதால் கூலித் தொழிலாளி உயிரிழந்தார். நாமக்கல் அருகே உள்ள, லத்துவாடி மேற்கு அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மகன் முருகவேல் (22). முட்டை விற்பனை நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று முருகவேல் வீட்டின் அருகே ரோட்டில் நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் முருகவேல் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் கீழே விழுந்து, பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள், சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகவேல் உயிரிழந்தார். இது குறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், எஸ்ஐ ஜவகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல், மோட்டார் சைக்கிளில் சென்றவரை தேடி வருகின்றனர்.

Updated On: 23 May 2022 2:00 AM GMT

Related News