Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் நாளை அரசு அலுவலர்களுக்கான செஸ் போட்டி
செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வுக்காக நாமக்கல்லில் நாளை அரசு அலுவலர்களுக்கான செஸ் போட்டி நடைபெறுகிறது.
HIGHLIGHTS
இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் தலைமையில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு தொடர்பாக, அனைத்து அரசு அலுவலர்களுக்கிடையேயான செஸ் போட்டிகள் 19ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது. பங்கேற்கும் அனைத்து அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து போட்டியில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.