Begin typing your search above and press return to search.
நாமக்கல் அரசு கல்லூரி சார்பில் 75-வது சுதந்திரதின அமுத பெருவிழா
நாமக்கல் அரசு கல்லூரி சார்பில் 75-வது சுதந்திரதின அமுத பெருவிழா நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சார்பில், 75வது சுதந்திரத் திருநாள் மற்றும் அமுதப் பெருவிழா வார விழா லத்துவாடி பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் கண்ணன் தலைமை வகித்தார். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் முருகன் பங்கேற்று, நாட்டு சுதந்திரத்தை மாணவ, மாணவியர் எவ்வாறு பேணி பாதுகாக்க வேண்டும், தேசபக்தியுடன் நம் நாட்டின் வளர்ச்சிக்காகவும், ஒற்றுமைக்காகவும் பாடுபட வேண்டும் என அறிவுறுத்தினார். மாணவ, மாணவியருக்கு, சுதந்திர தின அமுதப் பெருவிழா வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில், அவர்களுக்கு தேசியக்கொடி வழங்கி, இனிப்புகளும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கல்லூரி ஜே.ஆர்.சி. திட்ட அலுவலர் வெஸ்லி, உள்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.