தேர்தல் விழிப்புணர்வு வாகன பிரசாரம்
மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
HIGHLIGHTS
தேர்தல் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மின்னணு வீடியோ வாகனம் மூலம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ் இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த வாகனத்தில் 100 சதவிகிதம் வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையத்தின் மூலம் குறும்படங்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களில் எவ்வாறு வாக்களிக்கலாம் உள்ளிட்ட குறும்படங்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக தரைதளத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டிய செய்தியாளர்களுக்கு செய்திகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஊடக மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார்.