Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது
நாமக்கல்லில் பொங்கல் பரிசு தொகுப்பை தொடங்கி வைத்தார் அமைச்சர் தங்கமணி .
HIGHLIGHTS
நாமக்கல்லில் நகராட்சி பகுதியில் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மாவட்ட ஆட்சியர் மெகராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசு பொருட்கள் வழங்குவதை துவக்கி வைத்தனர். இதில் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்பட்டது. இத்துடன் ரூ.2,500 ரொக்கபணமும் வழங்கப்பட்டது.