Begin typing your search above and press return to search.
நாகை ஸ்ரீமுச்சந்தி மகா காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் விழா
நாகை ஸ்ரீ முச்சந்தி மகா காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் விழாவில் புனித நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர்.
HIGHLIGHTS
நாகப்பட்டினம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முச்சந்தி மகா காளியம்மன் ஆலய 70வது ஆண்டு புரட்டாசி பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து பாலாபிஷேகம் செய்தனர். பின்னர் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் பம்பை, உடுக்கை போன்ற இசைக் கருவிகளுக்கு ஏற்ப பக்தர்கள் நடனமாடி பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக வந்தனர். இதனை தொடர்ந்து பொங்கல் விழாவும் மற்றும் முளைப்பாரி திருவிழா இரவு நடைபெறுகிறது.