/* */

இரவு ஊரடங்கு- வேளாங்கண்ணி ஆலயம், நாகூர் தர்கா வெறிச்சோடியது, பேராலயம்,

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரவு நேர முழு ஊரடங்கால் உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் வெறிச்சோடியது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் நேற்றிரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 4 மாநில எல்லை சோதனை சாவடிகள், 3 மாவட்ட எல்லை சோதனை சாவடிகளில் மாவட்ட காவல்துறை சார்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் தமிழக எல்லையான வாஞ்சூர் சோதனைச்சாவடி வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் தினமும் இரவு நேரங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் தங்கி வந்த நிலையில் இரவு நேர ஊரடங்கால் நாகூர் தர்கா வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய முகப்பு மற்றும் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன், கடற்கரைக்கு மக்கள் செல்வதை தடுக்கும் வகையில் கடற்கரை பாதை கயிறு கட்டப்பட்டு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், நாகை புதிய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டதுடன், அங்கு இருந்த கடைகளை வர்த்தகர்கள் அவசர அவசரமாக அடைத்தனர்.

Updated On: 21 April 2021 5:47 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி