/* */

நாகை நகராட்சியில் ராட்சத ட்ரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தார்

நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ராட்சத ட்ரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை எம்எல்ஏ ஷாநவாஸ் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாகை நகராட்சியில் ராட்சத ட்ரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தார்
X

நாகப்பட்டினம் நகராட்சி பகுதியில் ட்ரோன் கருவி மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஷ் தொடங்கிவைத்தார.

நாகை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகை நகராட்சி சார்பாக ராட்சத ட்ரோன் கருவி மற்றும் நவீன கிருமி நாசினி தெளிப்பான் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கபட்டது.

தெற்கு பால்பண்ணைசேரி, டாட்டா நகர், உள்ளிட்ட நாகை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் தொடங்கி வைத்தார்.

சென்னையில் இருந்து வருகை தந்த அண்ணா பல்கலைகழக குழு மாணவர்கள் செயல்திட்டத்தில் உருவாக்கப்பட்ட ராட்சத ட்ரோன் மற்றும் நவீன கிருமி நாசினி தெளிப்பான் கருவிகள் வீதிகளில் கிருமி நாசினி தெளிப்பதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். நிகழ்ச்சியில் திமுக நாகை மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Updated On: 2 Jun 2021 1:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்