/* */

நாகப்பட்டினம் கடற்கரையை ரூ.10 கோடியில் மேம்படுத்த நடவடிக்கை

நாகப்பட்டினம் கடற்கரையை ரூ.10 கோடியில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

HIGHLIGHTS

நாகப்பட்டினம் கடற்கரையை ரூ.10 கோடியில் மேம்படுத்த நடவடிக்கை
X

நாகப்பட்டினத்தில் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அலுவலர்கள் கூட்டம் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், பொதுப்பணித் துறை நெடுஞ்சாலைத் துறை ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி மக்களை பாதுகாக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், பேரிடர் காலத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப மக்களுக்கு உதவுவது குறித்தும், கழிவு நீர் தேங்கினால் அதனை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும், வடகிழக்கு பருவ மழை முடியும் வரை அனைத்து அதிகாரிகளும் எச்சரிக்கையாகவும் , முன்னேற்பாடாகவும் இருக்க வேண்டும் என உத்தரவிட பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் நாகப்பட்டினம் கடற்கரையை மேம்படுத்த சுற்றுச்சூழல் துறை மூலம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீலக்கொடி சான்றிதழ் கடற்கரையாக மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Updated On: 29 Oct 2021 5:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  8. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  9. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்