/* */

அணையில் மூழ்கிய மீனவரின் உடல் மீட்பு

கிருஷ்ணகிரி அணையில் பரிசல் கவிழ்ந்ததில் அணையில் மூழ்கிய மீனவரின் உடல் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

அணையில் மூழ்கிய  மீனவரின் உடல் மீட்பு
X

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன்(46). மீனவர். இவர் கிருஷ்ணகிரி அணையில் பரிசலில் சென்று மீன் பிடித்து கொடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த சு3ம் தேதி இரவு அவர் மீன் பிடிக்க செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றார்.

ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி கோவிந்தம்மாள் கே.ஆர்.பி.அணை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் தீயணைப்பு வீரர்கள் மோட்டார் படகு மூலமாக நேற்று முன்தினம் முழுவதும் தேடினார்கள். முனியப்பன் கிடைக்கவில்லை. ஆனால் அவர் சென்ற பரிசல் கவிழ்ந்த நிலையில் கிடைத்தது. இதனால் பரிசல் கவிழ்ந்து அவர் நீரில் மூழ்கி இருக்கலாம் என்ற கோணத்தில் தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் முழுவதும் தேடினார்கள். ஆனாலும் உடல் கிடைக்கவில்லை. நேற்று இரண்டாவது நாளாக அவரை தேடும் பணி நடந்தது.

இந்தநிலையில் இன்று முனியப்பனின் உடல் அணையில் இருந்து மீட்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கிருஷ்ணகிரி அணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 Jun 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  5. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  8. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு