/* */

கிருஷ்ணகிரி குடியரசு தின விழாவில் மலர்களை எடுத்துச்செல்ல அதிகாரிகள் போட்டபோட்டி

கிருஷ்ணகிரியில் நாட்டின் 73 வது குடியரசு தின விழாவில் அலங்கரிக்கப்பட்ட விதவிதமான மலர்களை போட்டபோட்டி போட்டு எடுத்து சென்ற அரசு அதிகாரிகள்

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி குடியரசு தின விழாவில் மலர்களை எடுத்துச்செல்ல அதிகாரிகள் போட்டபோட்டி
X

கிருஷ்ணகிரியில் நாட்டின் 73 வது குடியரசு தின விழாவில் அலங்கரிக்கப்பட்ட விதவிதமான மலர்களை போட்டபோட்டி போட்டு எடுத்து சென்ற அரசு அதிகாரிகள்.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் 73 -வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. சுதந்திர இந்தியாவின் 73 -வது குடியரசு தின தேசியக்கொடியை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

இந்த குடியரசு தின விழாவை முன்னிட்டு ஏராளமான விதவிதமான மலர்களால் அந்தப்பகுதி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்து மாவட்ட ஆட்சியர் விழா மேடையை விட்டு புறப்பட்டு சென்ற உடனேயே அங்குள்ள மலர்களை போட்டா போட்டி போட்டுக் கொண்டு அரசு அதிகாரிகள், வருவாய் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட உயர் பொறுப்பில் இருப்பவர்கள் அந்த மலர்களை அள்ளிச் சென்றனர். இதை பார்த்திருந்த சிறுவர்களும் பொதுமக்களும் அதேபோல முண்டியடித்துக்கொண்டு மலர்களை எடுத்து செல்வதில் ஆர்வம் காட்டினர்.

குடியரசு தினவிழா நிகழ்ச்சி முடிவடைந்து மாவட்ட ஆட்சியர் புறப்பட்ட உடனேயே இதுபோன்று உயர் அதிகாரிகளும் பொறுப்புள்ள அரசு அலுவலர்களும் இந்த செயலில் ஈடுபட்டது பார்ப்பவர்களை முகத்தை சுளிக்க வைத்தது.

Updated On: 27 Jan 2022 2:50 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  2. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  6. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  7. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  10. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!