/* */

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 57 பேர் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 57 பேர் பாதிப்பு
X

இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் சற்று குறைந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவத் தொடங்கியது. இளம் வயதினர், வயதானவர்கள் என ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகமாக இருந்து வருகிறது.

தற்போது, கொரோனா 2,வது அலை தற்போது படிப்படியாக கட்டுக்குள் வருகிறது. எனினும், கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதில் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஹள்ளி அருகே தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். கடந்த 13ம் தேதி வரையில் மாவட்டம் முழுவதும் 42 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 12 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 57 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 16 Jun 2021 4:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...